Thursday, May 20, 2010

Cyclone Laila came to visit Ramanan

சென்னை: தமிழகத்தில் மழை வரும்போதெல்லாம் மக்களால் அதிகம் கவனிக்கப்படும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணனின் மகள் திருமணம் கன மழைக்கு மத்தியில் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

வழக்கமாக தமிழகத்தில் மழை வரும்போதும், புயல் வரும்போதும், வெயில் காலத்திலும், மக்களால் அதிகம் கவனிக்கப்படும் ஒரேநபர் ரமணன்தான். அவரது வானிலை அறிக்கை வாசிப்பு மக்களிடையே வெகு பிரபலம். மழை குறித்த நிலவரத்தை தனக்கே உரிய பாணியில் சொல்லி அசத்துவார்

ஆனால் லைலா புயலால் சென்னை நகரம் மழையால் வெளுத்து வாங்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்,2 நாட்களாக ரமணன் சத்தத்தையே காணோம். விசாரித்தபோது அவரது மகள் திருமணம்.எனவே ரமணன் 2 நாள் லீவு என்று தெரிய வந்தது.

அனேகமாக ரமணன் மிஸ் செய்த முதல் புயல் இதுவாகத்தான் இருக்கும். இருந்தாலும் புயலின் பாதிப்பை ரமணன் இல்லத்தாரும் அனுபவித்தனர். மழையால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் பெரும்பாடு பட்டுவிட்டனராம்.

திருமணத்திற்கு வந்தவர்கள், ரமணன் புயலையும் திருமணத்திற்கு அழைத்து வந்து விட்டாரா என்று சிரித்தபடி கேட்டனராம்.

ரமணன், புயல் செய்தியை வாசிக்காவிட்டாலும் கூட புயலும், மழையும் அவரைத் தேடிப் போய் விட்டது சுவாரஸ்யமானதுதான்.

Thanks to
http://thatstamil.oneindia.in/news/2010/05/20/cyclone-laila-ramanan-daughter-marriage.html

I dont know how to react to this "imaginative investigation" ! but definitely impressed with it.

1 comment:

  1. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com

    ReplyDelete