Thursday, August 21, 2014

Lyrics of ThiruPugazh lyrics from Kaaviya Thalaivan

Lyrics of ThiruPugazh lyrics from Kaaviya Thalaivan in Tamil Font

திருப்புகழ்
எழுதியவர்:தவத்திரு அருணகிரிநாதர்

இசை: ஏ ஆர் ரகுமான் 

பாடியவர்: வாணி ஜெயராம்

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு பெருமாளே.

No comments:

Post a Comment